search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
    X

    சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடும் காட்சி.

    மரக்காணம் அருகே கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

    • அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்
    • கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

    விழுப்புரம் :

    மரக்காணம் அருகே நகர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்த தெருவில் சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடுவதாலும், அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தெருவில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் மர்ம நோய்களும், மலேரியா, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×