search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடுமையான குளிர்"

    • சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மேலும் தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் மலை பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    அதிகரிக்கும் நீர்மட்டம்

    மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகள், ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    ஏற்காடு

    குறிப்பாக சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பஸ் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

    மேலும் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து செல்கிறது. தற்போது குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வந்தாலும் சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காடு பகுதியில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். தொடர் சாரல் மழை மற்றும் பனி மூட்டம், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×