என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கடாபி மகன்
நீங்கள் தேடியது "கடாபி மகன்"
வேட்புமனுவை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக செயிப் அல் இஸ்லாம் கடாபி, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
பெங்காசி:
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த மாதம் 24ஆம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது.
மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் கடாபி இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு எதிரான முந்தைய தண்டனைகள் காரணமாக அவர் தகுதியற்றவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.
2015 ஆம் ஆண்டு தனது தந்தையை பதவி விலகக் கோரிய எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியதற்காக செயிப் அல் இஸ்லாம் கடாபிக்கு திரிபோலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பு லிபியாவின் போட்டி அதிகாரிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. பின்னர் அவர் 2017ல் விடுவிக்கப்பட்டார். எனினும், போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அண்ணா பிறந்த நாள்: நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகள் விடுதலை- அரசாணை வெளியீடு
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
கெய்ரோ:
லிபியாவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐ.நா. தலைமையில் பல வருடங்களாக ஜனநாயக ரீதியிலான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், நாட்டின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பிறகு, வரும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில், மறைந்த சர்வாதிகாரி கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாம் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செயிப் அல் இஸ்லாம் பேசியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை தேர்தல் அதிகாரி ஒருவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சீப் அல் இஸ்லாம், நாட்டின் எதிர்காலத்திற்கான சரியான பாதையை கடவுள் தீர்மானிப்பார் என்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, செயிப் அல்-இஸ்லாம் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
லிபியாவில் கடந்த 2011ல் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் செயிப் அல் இஸ்லாம் தேடப்படுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த கடாபியின் ஆட்சி, மக்கள் எழுச்சியால் 2011ல் கவிழ்ந்தது. அதன்பின்னர் கடாபியின் மகன் செயிப் அல் இஸ்லாமை கிளர்ச்சியாளர்கள் சிறைப்பிடித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த சண்டை, உள்நாட்டு போருக்கு மத்தியில் கடாபி கொல்லப்பட்டார். 5 ஆண்டுகள் தடுப்புக் காவலுக்குப் பிறகு 2017ல் செயிப் அல் இஸ்லாம் விடுதலை செய்யப்பட்டார். தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுவது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X