search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன்கள் தள்ளுபடி"

    • கூட்டுறவுத் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது என்றாா்.

    மூலனூர் :

    திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரில் கூட்டுறவுத் துறை சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களுக்கான தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.

    இதில் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் 1,323 சுயஉதவிக் குழுக்களுக்கு அசல் ரூ.17.92 கோடி, வட்டி ரூ.2.41 கோடி என மொத்தம் ரூ.20.33 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்து சான்றிதழ்களை வழங்கினர்.

    அப்போது அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள 1,04,870 சுயஉதவிக் குழுக்களில் உள்ள 7,70,761 மகளிருக்கு ரூ.1,549 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதில், திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலமாக 1,323 சுயஉதவிக் குழுக்களின் (12,363 நபா்கள்) அசல் ரூ.17.92 கோடி, வட்டி ரூ.2.41 கோடி என மொத்தம் ரூ.20.33 கோடி அளவிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

    கடன் தள்ளுபடி செய்யப்பட்ட சுயஉதவிக் குழுக்களின் பட்டியல் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மூலனூா் பேரூராட்சித் தலைவா் மக்கள் தண்டபாணி, மூலனூா் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவா் சுமதி காா்த்திக், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் மணி, கூட்டுறவு சாா் பதிவாளா் செளமியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது.
    • மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் மன்னார்சாமி கோவில் தெரு அருகே உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கூட்டுறவு சங்க தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். பின்னர் மகளிர் சுயஉதவி குழு மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 57 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 90 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினார்கள்.

    பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது:-

    மகளிர் சுயஉதவி குழு கடனை ரத்து செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சார்ந்த திட்டங்களுக்கே அதிக முன்னுரிமை தருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன் மட்டுமல்லாமல் பெண்கள் எந்த கடன் கேட்டாலும் அதை கொடுக்குமாறு மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மத்திய கூட்டுறவு வங்கியும் பெண்களுக்கு கடன் கொடுக்க தயாராக உள்ளது

    மொத்தத்தில் 99.5 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தகுதியானவராக யார் இருந்தாலும் அரசின் நலத்திட்டங்களையும், அதன் பயன்களையும் பெற்றுக்கொள்ளலாம், மாநில அரசு வெளிப்படையாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் எங்கள் திட்டங்களை ஆய்வு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் கூட்டுறவு துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பதிவாளர் சண்முக சுந்தரம், மேலாண்மை இயக்குனர் அமலதாஸ், ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம் மூர்த்தி, சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இளையஅருணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×