search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு வயது உயர்வு"

    • ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. நடுநிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட தொகுப்பூதிய பணியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர பயிற்றுனர்கள், கல்வி மைய பாதுகாவலர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து, 60 வயதாக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டங்க ளில் உள்ள வட்டார வள மையங்க ளுக்கும், பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் தெரிவிக்கு மாறு ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் சுதர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    ×