search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டுநர் கைது"

    • மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
    • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×