search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டபிடாரம்"

    • பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
    • விவசாயிகள் தவணை தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருள்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 11 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள் இ.கே.ஒய்.சி. என்கிற இணையத்தில் பதிவு செய்து செய்வது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தொடர்ந்து தவணை தொகை பெறுவதற்கு தங்கள் ஆதார் விவரங்களை சரிபார்ப்பு செய்வது அவசியமாகும். எனவே இதுகுறித்து அருகாமையில் உள்ள சேவை மையத்திலோ, அல்லது அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி இ.கே.ஒய்.சி. செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்களது ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.

    ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் பிரதம மந்திரி கிசான் திட்ட பயனாளிகள் மேற்காணும் ஏதேனும் ஒரு முறையில் தங்களது ஆதார் விவரங்களை உடனடியாக பிரதம மந்திரி கிசான் திட்ட வலைதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து தவணை தொகைகள் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×