search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ஊழியர் பலி"

    • நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
    • புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வானூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவரது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று இரவு வானூர் அடுத்த மொரட்டாண்டிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கினர்.

    அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் பிரபாகரனை அவரது நண்பர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×