search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏற்காடு வனப்பகுதி"

    • கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன.
    • ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதானமாக விளங்குகிறது. இங்குள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள், மான், நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன.

    தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    நேற்று ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×