என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏ.டி.எம். கார்டு திருட்டு"
- டெல்லி திருடனை பொறி வைத்து பிடித்த போலீசார்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 72).ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.
இவர் கடந்த மாதம் 27 ந்-தேதி ஆரணி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மாற்று ஏ.டி.எம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறி நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடி சென்றார்.
இது சம்மந்தமாக வங்கியிலும் ஆரணி நகர போலீஸ் நிலையத்திலும் கோவிந்தராஜ் புகார் அளித்தார்.
பின்னர் மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து புதிய ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுக்க முதியவர் சென்றார்.
அதே வாலிபர் மீண்டும் வந்ததை கண்டு வங்கி வளாக பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முதியவர் புகார் அளித்தார். இதனையடுத்து முதியவரை மீண்டும் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுக்க போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
அப்போது முதியவரிடம் மீண்டும் அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்யவதாகககூறி ஏ.டி.எம். கார்டை பறிக்க முயன்றார். மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் டெல்லி, பிரேம் நகரை சேர்ந்த சஞ்சய்(32) என்பதும் முதியோர்களை குறி வைத்து ஏ.டி.எம்.,மில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
பின்னர் அவரிடமிருந்து 7 ஆயிரம் ரொக்க பணம் 13 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்