search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ATM Card theft"

    • டெல்லி திருடனை பொறி வைத்து பிடித்த போலீசார்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 72).ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.

    இவர் கடந்த மாதம் 27 ந்-தேதி ஆரணி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மாற்று ஏ.டி.எம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறி நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடி சென்றார்.

    இது சம்மந்தமாக வங்கியிலும் ஆரணி நகர போலீஸ் நிலையத்திலும் கோவிந்தராஜ் புகார் அளித்தார்.

    பின்னர் மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து புதிய ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுக்க முதியவர் சென்றார்.

    அதே வாலிபர் மீண்டும் வந்ததை கண்டு வங்கி வளாக பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முதியவர் புகார் அளித்தார். இதனையடுத்து முதியவரை மீண்டும் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுக்க போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    அப்போது முதியவரிடம் மீண்டும் அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்யவதாகககூறி ஏ.டி.எம். கார்டை பறிக்க முயன்றார். மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டெல்லி, பிரேம் நகரை சேர்ந்த சஞ்சய்(32) என்பதும் முதியோர்களை குறி வைத்து ஏ.டி.எம்.,மில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.

    பின்னர் அவரிடமிருந்து 7 ஆயிரம் ரொக்க பணம் 13 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார்,.
    • ப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்

    விழுப்புரம்:

    திண்டிவனம் நேரு வீதியில் அரசுக்கு சொந்த மான ஏடிஎம் உள்ளது. இந்த ஏ.டிஎம். மையத்துக்கு நேற்று மாலை கொள்ளார் காட்ராம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அருள் (வயது 44) கூலி தொழிலாளி. பணம் எடுக்க வந்தார். இந்நிலையில் அருளுக்கு ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுக்க தெரியாததால் அருகில் இருந்த டிப்டாப் ஆசாமியிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து கார்டு ரகசிய நம்பரையும் கூறி பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்   இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிப்டாப் ஆசாமி அருள் ஏடிஎம் கார்டை மறைத்து வைத்துவிட்டு அதற்கு மாறாக அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை அவரிடம் கொடுத்து பணம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்  பின்னர் ஏ.டி.எம். கார்டை திருடி சென்ற டிப் டாப் ஆசாமி வேறொரு ஏடிஎம் சென்று பணத்தை நூதகமாக திருடி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அருள் செல்போனிற்கு உங்கள் வங்கியில் இருந்து ரூ.30000 பணம் எடுக்கப்பட்டுள்ளது என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதை பார்த்த அதிர்ச்சடைந்த அருள் இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கூலித்தொழிலாளியிடம் இருந்து நூதனமாக திருடி சென்ற டிப் டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×