search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.எஸ். ஆசான்"

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம்
    • சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    பார்வதிபுரம், ஜூலை.30-

    நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் 17-வது நினைவு தினம் மற்றும் அவரது மனைவி பாப்பா 3-வது நினைவு தினத்தையும் முன்னிட்டு நாகர்கோவில் எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ்-ம், கிருஷ்ணன் கோவில் ஆதிபரா சக்தி சக்தி பீடமும் இணைந்து நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் வைத்து நாளை (31-ந்தேதி) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கோவில் வளாகத்தில் வைத்து இலவச சித்த மருத்துவ முகாம் நடத்துகிறது.

    எம்.எஸ்.எஸ். ஆசான் நினைவாக நடைபெறும் இந்த முகாமில் ஏராளமான சித்த மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் நோய்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்குகின்றனர். மேலும் முகாமின் போது சித்த மருந்து, மாத்திரைகள், எண்ணைகள் அனைத்தும் அங்கு வந்து ஆலோசனைகளை பெறும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.எஸ். ஆசான் அன் சன்ஸ், சிக்மா மெடிக்கல் டிரஸ்ட் மற்றும் சக்தி பீடத்தினர் செய்து வருவதாக எம்.எஸ்.எஸ்.ஆசான் அன் சன்ஸ் உரிமையாளர் மகாலிங்கம் என்ற பிரகாஷ் தெரிவித்தார்.

    மேலும் அவர் இந்த இலவச முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

    ×