search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணும் எழுத்து"

    • எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
    • பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் ,அரசு உதவிப் பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

    2025 ஆம் ஆண்டிற்க்கு தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் கற்றல் அடைவை பெற வேண்டி தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதில் இரண்டாம் பருவத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் , கணிதம் ஆகிய பாடங்களை எவ்வாறு நடத்தப்பட்ட வேண்டும் , கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவைகளை பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது. வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி,வட்டாரக்கல்வி அலுவலா்கள் தாமோதரன் , ஜெயலெட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா். இதில் 7 ஆசிரியர் பயிற்றுனர்கள், 36 ஆசிரியர்கள் பயிற்சி கருத்தாளர்களாக செயல்படுகின்றனர். மூன்று நாட்கள் நடைப்பெறும் இப்பயிற்சியில் 212 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

    ×