search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Numeracy"

    • பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.
    • எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் 62 தொடக்க பள்ளிகள் மற்றும் 32 நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் 238 பேருக்கு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் பயிற்சியில் கணிதப்பாடம் மற்றும் இரண்டாம் நாள் பயிற்சியில் தமிழ் பாடத்திற்கும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கையேடு ஆராய்தல் செயல்பாடு, மாதிரி வகுப்பறை குறித்து கற்பிக்கப்பட்டது.தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

    திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.
    • 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி வட்டார வள மையத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர் கவுரி, பயிற்சி நோக்கங்கள் பற்றி தன்னார் வலர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறினார். 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை வழங்கும் பொருட்டு 61 தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

    இதில் அடிப்படை எண்ண றிவு, முதலுதவி அடிப்படை சட்டங்கள், உடல்நலம், பேரிடர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு, உதவித்தொகை திட்டங்கள், இணையவழி சேவை, பணமில்லா பரிமாற்றம், ஏ.டி.எம் பயன்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுநர்கள் செல்வராணி, பார்வதி மற்றும் ஆசிரியர் வளர்மதி ஆகியோர் இப்பயிற்சியின் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

    • எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
    • பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் ,அரசு உதவிப் பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

    2025 ஆம் ஆண்டிற்க்கு தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் கற்றல் அடைவை பெற வேண்டி தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.

    இதில் இரண்டாம் பருவத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் , கணிதம் ஆகிய பாடங்களை எவ்வாறு நடத்தப்பட்ட வேண்டும் , கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவைகளை பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது. வரை நடைபெறுகிறது.

    இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி,வட்டாரக்கல்வி அலுவலா்கள் தாமோதரன் , ஜெயலெட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா். இதில் 7 ஆசிரியர் பயிற்றுனர்கள், 36 ஆசிரியர்கள் பயிற்சி கருத்தாளர்களாக செயல்படுகின்றனர். மூன்று நாட்கள் நடைப்பெறும் இப்பயிற்சியில் 212 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

    ×