search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
    X

    இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

    • பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.
    • எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் 62 தொடக்க பள்ளிகள் மற்றும் 32 நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக இடைநிலை ஆசிரியர்கள் 238 பேருக்கு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சியானது 15 வேலம்பாளையம் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் பயிற்சியில் கணிதப்பாடம் மற்றும் இரண்டாம் நாள் பயிற்சியில் தமிழ் பாடத்திற்கும் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர் கையேடு ஆராய்தல் செயல்பாடு, மாதிரி வகுப்பறை குறித்து கற்பிக்கப்பட்டது.தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கு பாடவாரியாக 12 கருத்தாளர்கள் வீதம் 36 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர்.

    திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினர். பயிற்சியை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

    Next Story
    ×