என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வரும் 26-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்"
- தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது.
- வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும்
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது.
வழக்குகளில் தீர்வு கண்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனே வழங்கப்படும். நீதிமன்றத்தில் நிலுவை இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்.
இப்படிப்பட்ட உன்னதமான வாய்ப்பை பொதுமக்களும் வழக்காடிகளும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்