என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NATIONAL PEOPLE'S COURT ON THE 26TH"

    • ஊட்டி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    • ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    ஊட்டி, ஜூன்.11-

    நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பத்தை ஊட்டி நீதிமன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் போக்குவரத்துத்துறை, தபால், சுகாதாரத்துறை, கல்வி நிறுவனங்கள் ஏதேனும் ஒன்றில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.

    மேலும் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு, ஊட்டி-643001 என்ற முகவரிக்கு தபால் மூலம் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு அமர்வுக்கு ரூ.1500 மதிப்பூதியம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது.
    • வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி 26-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகின்றது. மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும். முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது.

    வழக்குகளில் தீர்வு கண்டவுடன் அதற்கான தீர்ப்பு நகல் உடனே வழங்கப்படும். நீதிமன்றத்தில் நிலுவை இல்லாத வேறு சட்டப் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றத்தில் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்.

    இப்படிப்பட்ட உன்னதமான வாய்ப்பை பொதுமக்களும் வழக்காடிகளும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத நிலை வடிவமைக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    ×