என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எடிப்பாடி பழனிசாமி"
- அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு முதன்முறையாக மதுரைக்கு எடப்பாடி பழனிசாமி 29-ந்தேதி வருகிறார்.
- பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
மதுரை
அ.தி.மு.க. பொது குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தென்மாவட்டத்தில் தொண்டர்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக இடைக்கால பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக வருகிற 29-ந் தேதி விருதுநகர் வருகிறார். சிவகாசியில் அன்று காலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி மாலை 3 மணி அளவில் மதுரை வருகிறார். மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
இதற்காக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா மற்றும் நிர்வாகிகள் வழி நெடுக எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் ஏரா ளமான ெதாண்டர்களை திரட்ட நிர்வாகிகள் தீவிர மாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்