search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்"

    • லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • 513 அரசு பள்ளிகளில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தேனி:

    தேனி வட்டம் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    பள்ளிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டு ள்ளது. இத்திட்டத்தில் சுகாதாரமான குடிநீர், தூய்மையாக வகுப்பறை களை வைத்துக் கொள்வது, பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்து க்கொள்வது, குப்பைகளை முறையாக பராமரிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது பள்ளி களில் காய்கறி தோட்டம் அமைப்பது போன்ற செயல்பாடுகளை மாண வர்களிடம் ஊக்குவிப்ப தற்கான பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி, நடுநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 513 அரசு பள்ளிகளில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற தூய்மை விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

    லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒவ்வொரு மாத மும் முதல் திங்கள் கிழமையில் நடைபெறும் .

    இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, முதன்மை கல்வி அலுவல ரின் நேர் முக உதவியாளர் பெருமாள், லெட்சுமிபுரம் பள்ளி தலைமையாசிரியர் பேபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×