search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எகொள்ளிடம்"

    • புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது

    திருமானூர்,  

    அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிட ஆற்றில் ஆடி18 முன்னிட்டு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பலர் ஆற்றில் நீராடி தாலி பெருக்கி கட்டி தோச பரிகாரம் செய்து சாமி கும்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது

    18ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவிரி.. வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக என்ற சினிமாப்பாடல் ஆடிப்பெருக்கை நினைவூட்டும் பாடல். காவிரியைப் பெண் தெய்வமாக, தாயாக, தோழியாக நினைத்துப் போற்றுவது காவிரிக்கரையோர மாவட்ட மக்களின் வழக்கம்

    மன்னர்கள் காலம் தொட்டே காவிரி க்கரையோர மாவட்டங்க ளில் சம்பா, தாளடி, குறுவை என மூன்று வித நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

    தென்மேற்குப் பருவமழை ஆனிமாதம் துவங்கியதும், குடகுமழையில் பெருக்கெடுக்கும் காவிரி வெள்ளம், ஆனி கடைசியில் கொங்கு, சோழமண்டலங்களைத் தொடும். சித்திரை, வைகாசி வெயிலில் காய்ந்து கிடந்த நிலங்களும், நீர்நிலைகளும் ஆடியில் வரும் புதுதண்ணீரால் நிரம்பும்.

    ஆடிப்பட்டத்தில் அந்தாண்டு முதன்முதலாக விவசாயிகள் தங்கள் நெல்சாகுபடியைத் துவங்குவார்கள். நெல் விதைப்புக்காக தண்ணீரைக் கொண்டு வரும் காவிரியை வணங்கி வரவேற்பதே "ஆடிப்பெருக்கு' விழாவில் திருமானூர் கொள்ளிட ஆற்றங்கரையில் போலீஸ் காவலர்கள் துணையோடு புதுமண தம்பதிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் கொள்ளிட ஆற்றில் நீராடி சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு ஆற்றில் குளிக்க திருமானூர் போலீஸ் காவல்பணியில் ஈடுபட்டிருந்தது.



    ×