search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்"

    • 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும்.
    • மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

    சேலம்:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும். ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். எம்பிளாய் யூனியன் மாவட்ட தலைவர் ஹரிஹரன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் அண்ணா சிலை வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர் கோபால்,ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, ஒப்பந்த தொழிலாளர்கள் மாவட்ட செயலாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×