search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் மீது வழக்கு"

    • கட்டுமான பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான் பட்டியை சேர்ந்தவர் முருகன்(வயது53). மத்திய அரசு ஒப்பந்ததாரராக உள்ளார்.

    இவரது உறவினரான சிவகாசி கெங்காகுளத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற ஏ.கே.சாமி என்பவர் சென்னை ஊனமுற்றோர் கல்லூரியில் நிர்வாக பொறியாளராக உள்ளார். அவர் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தால் அதற்குரிய பணத்தை கொடுத்து விடுவதாக முருகனிடம் கூறியுள்ளார்.

    கருப்பசாமி மத்திய அரசு பணியில் இருப்பதால் அவர் மூலமாக டெண்டர் கிடைக்கும் என்று கருதி வீடு கட்டுவதற்கு தேவையான செங்கல், சிமெண்டு, கம்பி என ரூ.16 லட்சம் மதிப்பிலான கட்டுமான பொருட்களை முருகன் வாங்கி கொடுத்தார். அதற்குரிய பில்லை கொடுத்த பின்னர் கருப்பசாமி பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கருப்பசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து வன்னியம்பட்டி போலீசார் கருப்பசாமி மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×