search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊர்வசி ரவுத்தேலா"

    • ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா
    • 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்

    தங்க முலாம் பூசப்பட்ட ₹3 கோடி மதிப்புள்ள கேக்கை வெட்டி தனது 30-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

    3 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 காரட் தங்கமுலாம் பூசப்பட்ட கேக்கை பிரபல பாடகர் யோ யோ ஹனிசிங் பரிசாக கொடுத்துள்ளார்.

    தற்போது பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து 'செகண்ட் டோஸ்' என்கிற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வரும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தங்க கேக்கை அவர் பரிசளித்துள்ளார். இதற்காக யோ யோ ஹனி சிங்கிற்கு நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஊர்வசி பதிவிட்டுள்ளார்.

    "என்னைப் பொறுத்தவரை, ஊர்வசி ரவுடேலா உண்மையிலேயே உலகின் மிக அழகான பெண், நான் அதை பல முறை கூறியிருக்கிறேன். அவள் மிகவும் அழகான பெண், அதனால்தான், நான் 3 கோடி மதிப்பிலான இந்த கேக்கை அவளுக்காக வாங்க முடிவு செய்தேன் என்று யோ யோ ஹனி சிங் தெரிவித்துள்ளார்.


    • 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
    • இவர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.


    ஊர்வசி கொடுத்த புகார்

    இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர். இதில் நடிகை ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார். அப்போது அவர் தனது 24 கேரட் கோல்டு ஐ போனை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

    இந்த புகார் மனுவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், யாராவது போனை பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.


    • 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார்.
    • தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.



    ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார். அப்படி தற்போது அவர் கூறிய கருத்து ஒன்றை பகிர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிடம் செய்தியாளர் ஒருவர் 'ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக எப்படி உயர்ந்தீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.


    அதை ஏற்றுக்கொள்வது போல பதிலளித்த அவர், 'இது நல்ல விஷயம். ஒவ்வொரு நடிகர், நடிகையரும் இப்படிப்பட்ட ஒரு நாளை காண ஆசைப்படுவார்கள்' என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் 'அப்படி என்றால் 60 நிமிடத்திற்கு ரூ.60 கோடியா வாங்குவார். பொய் சொல்வதற்கு அளவில்லையா?" என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    • தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
    • இவர் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் 'தி லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது போயப்பட்டி ரேப்போ, தில் அஹ்ய் கிரே, பிளாக் ரோஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


    ஊர்வசி ரவுத்தேலா

    ஊர்வசி ரவுத்தேலா

    இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிங்க் நிற உடையில் இருக்கும் ஊர்வசி கழுத்தில் அச்சு அசலாக முதலை போன்றே காட்சியளிக்கும் அணிகலனை அணிந்திருக்கிறார். இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

    • தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
    • இவர் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தற்போது கிக், ரேஸ் குர்ரம், கிக்-2, துருவா, சைரா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.


    ஊர்வசி ரவுத்தேலா - அகில்

    ஊர்வசி ரவுத்தேலா - அகில்

    இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் வலைத்தளத்தில் விமர்சகர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.


    ஊர்வசி ரவுத்தேலா

    ஊர்வசி ரவுத்தேலா

    இதையடுத்து அந்த நபர் மீது அவதூறு வழக்கு தொடர தனது வழக்கறிஞர் மூலம் ஊர்வசி ரவுத்தேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "நீங்கள் சொன்னதுபோல் படப்பிடிப்பில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. தவறான தகவல் வெளியிட்ட உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ×