search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து மாதம்"

    • அணைக்கட்டு பீ.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
    • அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அணைக்கட்டு பீடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்கா ட்சியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்ப டுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, அணைக்கட்டு சேர்மன் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கலர் மாக்கோலம் போடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் அங்கன்வாடி பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×