search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nutrition Month"

    • அணைக்கட்டு பீ.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது
    • அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அணைக்கட்டு பீடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்கா ட்சியை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தொடங்கி வைத்தார்.

    இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்ப டுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா, அணைக்கட்டு சேர்மன் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து, 30ஆம் தேதிவரை ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய கலர் மாக்கோலம் போடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் அங்கன்வாடி பகுதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து” ஆகும்.

    கள்ளக்குறிச்சி, செப்.2-

    கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்தசோகை குறைபாடு குறித்து விளக்கும் காணொலி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்விழிப்புணர்வு விழாவில், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறையினர், சமூக நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து" ஆகும். பெண்களின் ஆரோக்கியம், குழந்தைகள் கல்வி, பாலினம் உணர்திறன், நீர் பாதுகாப்பு மேலாண்மை, மலைவாழ் பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வதாகும்.

    மேலும் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை உட்கொண்டு, ஆரோக்கியத்தை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கூறினார். தொடர்நது 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மந்தவெளியில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் நல மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொணடு பல்வேறு விழிப்பு ணர்வுகள் அடங்கிய பதாகை களை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதேபோல் கிராமப்புற மக்கள் எளிதில் ஊட்ட ச்சத்து குறைபாடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், ஊட்டச்சத்து மிக்க உணவு களை கண்டறிந்து உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு காணொலி வாகனம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு இரத்த சோகை ஏற்படக் காரணமாக உள்ள இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளா மை, குடற்புழு பாதிப்பு, தன்சுத்தம் பேணாமல் இருத்தல், கழிவறையை பயன்படுத்தாமல் இருத்தல், செருப்பு அணியாமல் நடத்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணி யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×