search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிய நடவடிக்கை"

    • அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்
    • கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளியில் இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    மற்ற அரசு பள்ளிகளில் இருப்பது போல் இந்த அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சி, வீராரெட்டிபாளையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி தலைவர் தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வு மான தளவாய்சுந்தரம் கலெக்டர் அரவிந்தை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மீன்வளத் துறை அலுவலகத்திலிருந்து கடந்த வாரம் வரப் பெற்ற கடிதத்தில் கேசவன் புத்தன் துறை ஊரை சார்ந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை அரசிடமிருந்து பெற்று வருகின்ற 25 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்று உண்மைக்கு மாறான தவறான தகவலின் அடிப்ப டையில் மீன்வளத்துறை இந்த கடிதத்தை அனுப்பி யுள்ளதாக அறிய முடிகிறது. இவர்கள் கடல் தொழில் செய்யாதவர்கள் என்பது உண்மைக்கு புறம்பானது, இவர்கள் அனைவரும் கடலை நம்பி வாழ்பவர்கள். கடலுக்கு செல்ல முடியாத நாட்களில் தற்காலிகமாக வேறு சிறு தொழில்களையும் செய்து வருகிறார்கள்.

    கேசவன்புத்தன்துறை ஊரில் கடல் தொழில் செய்து வருகின்ற 13 பேருக்கு அரசால் வழங்கப்படுகின்ற நிவாரணங்கள் அனைத்தும் முறையாக கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு குறைந்த நிவாரணம் வழங்கப்படு கிறது. ஆனால் தடைக் கால நிவாரணம் வழங்கப்படவில்லை. மற்றவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் குறைந்த கால நிவாரணம் கிடைப்பதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு ஏழை மீன்பிடி தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படுகின்ற அனைத்து நிவாரணங்களும் முறையாக கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி செட்டிவிளை ஊரில் முந்திரி கிணறு முதல் செட்டிவிளை முத்தாரம்மன் கோவில் வரை உள்ள சாலையினை ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும், ஈத்தங்காடு மணக்குடி ரோட்டிலிருந்து பூலாங்குளம் இணைப்புச் சாலையினை ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யவும் தெரிவிக்கப்

    பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம் வட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சி, தெற்கு கிராமம், வெள்ளாளர் தெரு பிள்ளையார் கோவில் பின்பகுதியில் 40 வருடத்திற்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள். ரியல்எஸ்டேட் தொழிலுக்காக இந்த குடியிருப்புகளை அகற்றி பாதை அமைக்க நீதிமன்ற உத்தரவு பெற்றுள்ளதாக தெரிகிறது. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் குடியிருப்பதற்கு தகுந்த ஏற்பாடு செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அளித்த மனுவில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    அப்போது தோவாளை ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர் சாந்தினிபகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் அக் ஷயாகண்ணன், சாமி தோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • உதவி ஆணையர் (கலால்) சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சுமார் 517 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறு த்தப்பட்டனர்.

    மேலும்,முதல்-அமை ச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமே ஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு இயக்க திட்ட அலுவலர் காஞ்சனா, தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன், உதவி இயக்குநர் நில அளவைகள் மற்றும் பதிவேடுகள்துறை சீனிவாசன், உதவி ஆணையர் (கலால்) சிவா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×