search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமை சட்டம் பற்றி"

    • சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி துறை சார்பாக 2005-ம் வருடம் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலை நகரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    சென்னிமலை பார்க் ரோட்டில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தினை கைத்தறி கட்டுப்பாடு அலுவலர் எம்.அன்புக்கரசி தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை நகரின் நான்கு ராஜ வீதி, காங்கேயம் ரோடு, பஸ் நிலையம் வழியா வலம் வந்த இந்த ஊர்வலம் அப்பாய் செட்டியார் வீதியில் உள்ள சென்டெக்ஸ் நிறுவனத்தில் நிறைவு பெற்றது.

    இந்த ஊர்வலத்தில் சென்னிமலை பகுதியில் செயல்படும் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×