search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிர் தண்ணீர்"

    • நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
    • பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.

    உடுமலை

    தாராபுரத்தில் உள்ள அமராவதி வடிநீர் கோட்ட நீர்நிலை பாசன செயற்பொறியாளரிடம் அமராவதி பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமராவதி அணை பிரதான கால்வாய் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும் பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்காமலும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் வறட்சியினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம்.

    எனவே அமராவதி அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு பிரதான கால்வாய் பாசன பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றுவதற்காக 20 நாட்கள் மட்டும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×