search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரி வாயு தயாரிப்பு திட்டம்"

    • எரிவாயு தயாரிப்புக்கு தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும்.
    • இந்த திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

    பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாட்டு சாணத்தைக் கொண்டு உயிரி வாயு தயாரிக்கும் திட்டத்தை இந்துஸ்தான் பெட்ரோலிய கழக நிறுவனமான ஹெச்.பி.சி.எல். ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோரில் தொடங்கியுள்ளது.

    இந்தத் திட்டத்திற்கான பூமி பூஜை, ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் பத்மேடா கிராமத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.   


    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் திட்டம் இதுவாகும்.

    உயிரி எரிவாயு தயாரிக்க இந்த நிலையத்தில் தினசரி 100 டன் மாட்டு சாணம் பயன்படுத்தப்படும். இதிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருளை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். இத்திட்டம் ஓராண்டு காலத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும்.

    கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் படியும், மத்திய அரசு தொடங்கியுள்ள கோபர்தன் திட்டத்தின் கீழும், இந்தத் உயிரி வாயு தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ×