search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைப்பு சீரமைப்பு பணி"

    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று கரை உடைப்பினை சரி செய்யும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் சீரமைப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி பிரதான வாய்க்கால் கரையில் கடந்த 10-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது.

    இதன் காரணமாக வாய்க்காலில் வந்து கொண்டிருந்த 1,300 கனஅடி தண்ணீர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைபயிர்களை மூழ்கடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

    இதனை அடுத்து பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு திறக்கப் படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று கரை உடைப்பினை சரி செய்யும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் சீரமைப்பு பணி குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 தினங்களாக நடைபெற்று வந்த கால்வாய் சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் சீரமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும்.

    அதனைத்தொடர்ந்து வரும் சனிக்கிழமை முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்.

    மேலும் தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு குறித்து அரசிடம் எடுத்து கூறி விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×