search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை பகுதி"

    • போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் உற்பத்திசெய்கின்றனர்.சமீப நாட்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மழையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்தன.

    மேலும் அதற்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கிலோ 5 ரூபாய்க்கு தக்காளியும், 10 ரூபாய்க்கு குறைவாக வெங்காயமும் விற்பனையாகின. தக்காளி, வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் தற்போதைய நிலையில் மழை பாதிப்பு குறைந்துள்ளதால் வைகாசி பட்ட வெங்காய சாகுபடியை விவசாயிகள் மீண்டும் மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே விவசாயிகள் பலர் பட்டறை அமைத்து, வெங்காயத்தை விற்க முடியாமல் சேமித்து வைத்து உள்ளனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.20க்கு மேல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் நாட்களில் போதிய விலை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடமையே கண்ணாக மீண்டும் வெங்காய நடவில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது.
    • மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும்.

    உடுமலை:

    ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலம். கடந்த மே மாதம் கேரளாவில் பருவமழைகாலம் துவங்கியது. இதனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    அவ்வகையில் சில தினங்களாக உடுமலையில் பலத்த காற்று வீசுகிறது. மாலையில் காற்றின் வேகம் அதிகரித்து சுழன்று அடிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுனர்கள் திணறுகின்றனர்.

    குறிப்பாக பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் ஓட்டுனர்கள் சிலர் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×