search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்ற தீர்ப்பு"

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கினர். இதேபோல் பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கபாண்டி, ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முகபாண்டியன், ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி, ராஜேஷ் கண்ணா, முன்னாள் சேர்மன் எம்.கே.முருகேசன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா, நகர இளைஞரணி கேபிள் மணி, துரைக்கண்ணன், கச்சிராயிருப்பு முனியாண்டி, இலக்கிய அணி மணி, ஆசிரியர் ஜெய்பிரகாஷ், தியாகு, வார்டு செயலாளர் மணிகண்டன், தண்ட பாணி, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, மேலக்கால் காசிலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×