search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோட்டில் கனமழை"

    • தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களுக்கு திருமணமான மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தள சுவர் இடிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தாக் மீது விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில் 60 ஆண்டுகள் பழமையான வீட்டினை முறையாக பராமரிக்காமல் மேல் தளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வீட்டினை முறையாக பராமரிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஏ.ஓ.கே. நகரை சேர்ந்த முகமதுயாசர் (43) என்பவர் மீது 304 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது யாசரை நிபந்தனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

    இந்த பகுதியில் இதேபோல் பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது.
    • மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதைடுயத்து ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தாய், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பெரிய அக்ரஹாரத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் சாரம்மா (34), மகன் முகமது அக்தர் (12) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×