search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநிலை"

    • இணைய வழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாத மாணவர்கள் பங்கேற்கலாம்.
    • 14-ந் தேதி அதே பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

    ஈரோடு, 

    மொடக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு இளநிலை பட்ட ப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.

    இதன்படி வரும் 12-ந் தேதி (திங்கட்கிழமை) ஏற்கனவே இணைய வழியில் விண்ணப்பித்து சேர்க்கை பெறாத மாணவர்கள் பங்கேற்கலாம்.

    பி.எஸ்.சி. கணித அறிவியல், கணிதம், விலங்கியல், பி.காம். வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் கணினி பயன்பாடு, மொழி பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகிய 8 பாடங்க ளுக்கும் வரும் 14-ந் தேதி அதே பிரிவுக்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது.

    கலந்தாய்வுக்கு உரிய நாளில் காலை 10 மணிக்கு இணைய விண்ணப்ப நகல், பள்ளி மாற்று சான்று நகல், 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்று, 2 போட்டோ, ஆதார் அடையாள அட்டை போன்ற வற்றை எடுத்து வர வேண்டும்.

    அதனை அறிந்து வரலாம். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×