search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலக்கிய திருவிழா"

    • 28-ந்தேதி தொடக்கம்
    • ஆலோசனை கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் புத்தக கண்காட்சியுடன் இணைந்த 2-வது திருப்பத்தூர் இலக்கிய திருவிழா- 2023 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இது குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் வணிகர் சங்கங் கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர் கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில், "இந்த இலக்கிய திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக அரங்குகள் திறந்து வைக்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தக கண்காட்சியை பார் வையிட்டு அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பெருக்கி கொள்ளவும் இந்த புத்தக கண்காட்சி அமையும். மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், மொழிப்பெயர்ப்பா ளர்கள், பேராசிரியர் கள், கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.

    அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட் டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, துணை ஆட்சியர்;கள் கோவிந்தன், முத்தையா, பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள். தமிழ் பேராசிரியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இலக்கிய திருவிழாவில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.
    • இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான 8-ந்தேதி காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார்.

    சென்னை:

    அறிவு சுரங்கமாக திகழ்ந்து கொண்டிருக்கும் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் சென்னை இலக்கிய திருவிழாவால் அங்கு பிரபல எழுத்தாளர்கள் சங்கமித்துள்ளனர்.

    இதனால் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தமிழ் மணம் கமழ்கிறது. பல்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த இந்த இலக்கிய திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் 100 நூல்களை வெளியிட்டு பேசியபோது இன்றைய இளம் தலைமுறையினரிடம் தமிழ் உணர்வை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இலக்கியம்தான் மனிதனை மேம்படுத்தும் என்றும், சிறு வயதிலேயே மாணவர்களிடம் தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வத்தை உருவாக்க இத்தகைய நிகழ்ச்சிகள் உறுதுணையாக இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதற்கேற்ப இலக்கிய திருவிழாவில் பல்வேறு தலைப்புகளில் பிரபல எழுத்தாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்று பேசி வருகிறார்கள். முதல் நாளான நேற்று திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் என்ற தலைப்பில் ஜெயரஞ்சனும், திராவிடமும் தமிழ் சினிமாவும் என்ற தலைப்பில் ராஜனும், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை தொடர்பாக காமராசனும் பேசினார்கள்.

    மக்களுக்கான சினிமா ஒரு புரிதல் என்ற தலைப்பில் டைரக்டர் வெற்றி மாறனும், திரைக்கு பின்னால் இலக்கியம் என்கிற தலைப்பில் டைரக்டர் மிஸ்கினும் பல்வேறு கருத்துக்களை எடுத்து கூறினார்கள். காலநிலை மாற்றமும், தமிழ்நாடும் பற்றி சுந்தர்ராஜன் பேசினார்.

    இரண்டாம் நாளான இன்று பாலின சமத்துவம் பற்றி நர்த்தகி நடராஜ், 'நவீன கோடுகள்' தலைப்பில் விஸ்வம், "வரலாறு ஏன் படிக்க வேண்டும்" என வெண்ணிலா, "வட சென்னை மண்ணும், மனிதர்களும்" பற்றி பாக்கியம் சங்கர், இலக்கியமும், சினிமாவும் பற்றி கவிஞர்கள் யுகபாரதி, கபிலன் ஆகியோரும் பல்வேறு கருத்துக்களை அள்ளி தெளித்தனர்.

    திரைப்படமும்... இசையும் பற்றி ஷாஜி, தமிழ் திரையும் தமிழக வரலாறும் பற்றி கடற்கரய், பாரதி காலத்து சென்னை என்கிற தலைப்பில் மணிகண்டன், கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் என்ற தலைப்பில் ராஜேந்திரன் ஆகியோரும் உரையாற்றினர். இலக்கிய திருவிழாவின் நிறைவு நாளான நாளை (8-ந்தேதி) காலையில் தமிழ் சமூகத்தில் பெண்ணியம் என்ற தலைப்பில் கனிமொழி எம்.பி. பேசுகிறார். அவருடன் கவிதா முரளிதரன் கலந்துரையாடுகிறார்.

    சமூகம் பழகு என்ற தலைப்பில் டைரக்டர் கரு.பழனியப்பன் உரையாற்றுகிறார். நாளை மாணவர்கள் கலை திருவிழாவும் நடைபெறுகிறது. கதை சொல்லி சதீஷ், "கோமாளியின் ஆஹா கதைகள்" பற்றி கதை சொல்கிறார்.

    ஒவ்வொரு நாளும் மாலையில் பல்வேறு கலைகள் தொடர்பாக தொடக்க நாளான நேற்று தண்டரை உமா-ராஜேஸ்வரி சகோதரிகளின் மக்களிசை பாடல்களை பாடி மகிழ்வித்தனர். இன்று மாலையில் ராப் இசை மரப்பாச்சி குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும் சென்னை கலைகுழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மாலையில் கரிசல் கிருஷ்ணசாமி, கரிசல் கருணாநிதி, வசந்தி, உடுமலை துரையரசன் ஆகியோரின் மக்கள் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.

    கலை இலக்கிய திருவிழா அண்ணா நூலக வளாகத்தில் 3 அரங்குகளில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு தமிழ் காற்றை சுவாசித்தனர்.

    நிகழ்ச்சியில் சங்க கவுரவ தலைவர் ஆர்.டி.பிரபு, மாநில அமைப்பாளர் சி.சிவகுமார், சங்க ஆலோசகர்கள் ஆர்.மகாதேவன், எல்.சுப்பிரமணி, துணை தலைவர் எம்.செந்தாமரை, பொருளாளர் ஆர்.ஜனனிரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.வெள்ளிக் கண்ணன். செயலாளர் எம்.அன்பழகன், எஸ்.ரேணுகாதேவி, பொருளாளர், செயலாளர். பி.பாஸ்கர், அலுவலக செயலாளர் எம்.ரூபன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    ×