search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயற்கை பேரிடர்"

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் தொடர்பு கொண்டிருக்கிறது.
    • நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம்.

    இறைச்சிக்காக உயிரினங்களை கொலை செய்வதால் தான் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர் சம்பவங்கள் ஏற்படுகின்றன என்று ஐ.ஐ.டி. மண்டி இயக்குனர் லக்ஷமிதார் பெஹெரா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உணவுக்காக விலங்குகளை கொல்லும் போது, சுற்றுச்சூழலில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்து உள்ளார். யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டதும் வைரல் ஆக துவங்கி விட்டது.

     

    "அப்பாவி விலங்குகளை கொன்று இரையாக்குவது சுற்றுச்சூழலை பாதிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இது ஏற்கனவே தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நிலச்சரிவு, மேக வெடிப்பு போன்ற சம்பவங்களை நாம் மீண்டும், மீண்டும் எதிர்கொண்டு வருகிறோம். இவை அனைத்திற்கும் காரணம் விலங்குகளை கொடுமைப்படுத்துவது தான்."

    "நல்ல மனிதர்களாக இருக்க என்ன செய்ய வேண்டும்? இறைச்சி போன்ற உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். ஆமாவா, இல்லையா?" என்று அவர் மாணவர்களிடையே பேசும் போது கேள்வியாக எழுப்பியுள்ளார்.

    • ராஜபாளையத்தில் இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கத்தின் துணை அமைப்பான இண்ட்ராக்ட் அமைப்பின் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. ரோட்டரி கிளப் செயலர் வியாஷ் மற்றும் சுந்தர் முன்னிலை வகித்தனர்.

    இண்ட்ராக்ட் கிளப்பின் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், கருத்தாளர், சிவகுமார் ஆகியோர் பேசினர். சத்ய சாய் அமைப்பின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், செல்வக்குமார் ஆகியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை காணொலி காட்சிகளின் மூலம் விளக்கினர்.

    மாணவர்களுக்கு ஏற்படும் ரத்தக்காயங்கள், எலும்பு முறிவு, மயக்கம், கை, கால் வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இண்ட்ராக்ட் கிளப்பின் செயலர் யுவராஜன் நன்றி கூறினார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    கேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief
    புதுடெல்லி:

    கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய மழையால் அம்மாநிலம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. 10 நாட்களாக பெய்த கன்மழையால் சுமார் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மழை நின்று வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், நிவாரணப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவை உலுக்கிய இந்த மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கேரள மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி மாநிலங்களவை செயலகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேரள மழை வெள்ளத்தினை ‘கடுமையான இயற்கை பேரிடர்’ என குறிப்பிட்டுள்ளார்.
    ×