search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
    X

    இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

    • ராஜபாளையத்தில் இயற்கை பேரிடர் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிங் சிட்டி ரோட்டரி சங்கத்தின் துணை அமைப்பான இண்ட்ராக்ட் அமைப்பின் சார்பில் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் இயற்கைப் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. ரோட்டரி கிளப் செயலர் வியாஷ் மற்றும் சுந்தர் முன்னிலை வகித்தனர்.

    இண்ட்ராக்ட் கிளப்பின் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், கருத்தாளர், சிவகுமார் ஆகியோர் பேசினர். சத்ய சாய் அமைப்பின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை குழுவின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், செல்வக்குமார் ஆகியோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை காணொலி காட்சிகளின் மூலம் விளக்கினர்.

    மாணவர்களுக்கு ஏற்படும் ரத்தக்காயங்கள், எலும்பு முறிவு, மயக்கம், கை, கால் வலிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இண்ட்ராக்ட் கிளப்பின் செயலர் யுவராஜன் நன்றி கூறினார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    Next Story
    ×