search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "natural disasters"

    புயல், சுனாமி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் வந்தாலும் தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். #ministerrajendrabalaji

    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள கம்மவார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் 441 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான சிறு வணிக கடன் உள்பட 1809 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வழங்கினர்.

    தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது.

    அதனடிப்படையில் கஜா புயல் வருவதற்கு முன்னரே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு கடலோர மாவட்டங்களுக்கு நவீன மீட்பு கருவிகளுடன் நீச்சல் வீரர்கள், மீட்புபடை வீரர்கள், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள், பால்வளத்துறை, கூட்டுறவு, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குழுக்கள் அமைத்தும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளை எடுத்து மிகப்பெரிய சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

    புயல், சுனாமி என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் வந்தாலும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, தமிழக மக்களை பாதுகாக்கின்ற ஒரு அரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராமநாதன் கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் திலீப்குமார், துணைப் பதிவாளர் ராமநாதன், இணைப்பதிவாளர் செந்தில்குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் தினகரன் உள்பட அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். #ministerrajendrabalaji

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaturalDisasters
    நியூயார்க்:

    பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி (79.5 பில்லியன் டாலர்) இழப்பு, பிரிட்டோ ரிகோவுக்கு 71.7 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பீடும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி (57.9 பில்லியன் டாலர்), இத்தாலி (56.6 பில்லியன் டாலர்) பிரான்ஸ் (48.3 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
    ×