search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strom"

    கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது.

    அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபரிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் வருகிற 15-ந்தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.

    இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாகை, கடலூர், காரைக்காலில் வழக்கத்தை விட கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயரும். எனவே மீனவர்கள் 16-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி இரவு வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.



    15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.

    தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

    15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக் கூடும். காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போதைக்கு 15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ. மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதை எச்சரிப்பதாகும்.

    புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்யும்.

    தற்போது புயல் தெற்கு திசை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gajastorm #storm #rain
    கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Gajastorm

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் காரணமாக வட தமிழகத்தில் நாளை மறுநாள் மாலை முதல் மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்; கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் 14-ம் தேதி பலத்த மழையும், 15-ம் தேதி ஒரு சில இடங்களில் மட்டும் மழையும் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வதில் அ.தி.மு.க. அரசின் மோசமான கடந்த காலம் காரணமாக புயல், மழை என்பன போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே மக்களின் உடல்கள் அச்சத்தில் நடுங்கத் தொடங்குகின்றன.

    இயற்கையை கட்டுப்படுத்துவதோ, அதன் சீற்றத்தை தடுத்து நிறுத்து வதோ எந்த சக்தியாலும் இயலாதது ஆகும். கடந்தகால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களின் உதவியுடன் புத்திசாலித்தனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பாதிப்புகளை ஓரளவு கட்டுப்படுத்துவது மட்டுமே சாத்தியமாகும்.


    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு எந்த முன் எச்சரிக்கைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல் முன்னெச்சரிக்கைப் பணியாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படைகளை நிறுத்த வேண்டும்.

    வடமாவட்டங்களில் ஒன்றியத்துக்கு ஓர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி வீதம் நியமித்து எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் அளவுக்கு சேதத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தேவையான எண்ணிக்கையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.

    புயல் மழைக்காலங்களின் போது பொதுமக்கள் செய்ய வேண்டியவை எவை, செய்யக்கூடாதவை எவை? என்பது குறித்து ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அம்மாநில அரசாங்கம் மிகச்சிறப்பாக சமாளித்தது. தேவைப்பட்டால் அம்மாநில அதிகாரிகளின் ஆலோசனையையும் பெறலாம்.

    புயல் தாக்கிய பின் பாதிப்புகளை சரி செய்வதை விட, முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுப்பது தான் சிறந்தது என்பதால், அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அதன்மூலம் கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதிப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss #Gajastorm

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளால் இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NaturalDisasters
    நியூயார்க்:

    பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கு ரூ.6 லட்சம் கோடி (79.5 பில்லியன் டாலர்) இழப்பு, பிரிட்டோ ரிகோவுக்கு 71.7 பில்லியன் டாலர் (ரூ.5 லட்சம் கோடி) இழப்பீடும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி (57.9 பில்லியன் டாலர்), இத்தாலி (56.6 பில்லியன் டாலர்) பிரான்ஸ் (48.3 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

    கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
    இலங்கையின் பல மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பெய்துவரும் கன மழைக்கு 8 பேர் உயிரிழந்தனர். #SriLankarains
    கொழும்பு:

    இலங்கையின் வல்லாளவிட்டா, புலத்சின்ஹலா, அகலவட்டா, மதுகாமா, படுராலியா, இன்கிரியா, படுல்லா, கலுட்டாரா, கல்லே, கெகல்லே ஆகிய மாவட்டங்களில் வெப்ப மண்டல புயல் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்திருந்தது.

    இதைதொடர்ந்து, கடந்த இருநாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் இம்மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 2 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    கல்லே மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கின்கங்கா ஆற்றில் கரை புரண்டு பாய்கிறது. இதனால், நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதால் கின்கங்கா, காலு, அத்தனகாலு ஓயா ஆகிய ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கலுட்டரா மாவட்டத்தில் மூன்றாம் எண் அபாய எச்சரிக்கையும், ஹல்டுமுல்லா பகுதியில் இரண்டாம் எண் எச்சரிக்கையும், படுல்லா, பஸ்ஸாரா பகுதிகளில் ஒன்றாம் எண் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழைசார்ந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #eightdeadinSriLanka  #SriLankarains
    ×