என் மலர்
நீங்கள் தேடியது "இயற்கை பேரழிவு"
- 1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு (சி.ஓ.பி.30) பிரேசிலின் அமேசான் நகரமான பெலெம் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. மாநாட்டில் சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் காலநிலை ஆபத்து குறியீட்டை வெளியிட்டது.
இதில் உலகளவில், 1995-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 9,700 க்கும் மேற்பட்ட தீவிர இயற்கை பேரழிவுகளால் 8.3 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேரிடர்களுடன் வெள்ளம், புயல், வறட்சி மற்றும் வெப்ப அலைகளால் பாதிப்புகள் அதிகளவில் இருந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 430 இயற்கை பேரிடர்களில் சிக்கி 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த இயற்கை பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ.15,000 கோடி பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
1998-ம் ஆண்டு குஜராத் புயல், 1999-ம் ஆண்டு ஒடிசா சூப்பர் புயல், 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளன.
2024-ம் ஆண்டில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயற்கை பேரழிவுகளால் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் டொமினிகா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர், ஹோண்டுராஸ், லிபியா, ஹைட்டி, கிரெனடா, பிலிப்பைன்ஸ், நிகரகுவா, இந்தியா, பஹாமாஸ் ஆகியவை உள்ளன.
பூமி வெப்பமயமாகுவதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக உலகில் பேரழிவுகள் ஏற்படுகின்றன. அது குறித்த அறிக்கையை ஐ.நா. சபை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 1998 முதல் 2017-ம் ஆண்டுவரை சர்வதேச நாடுகளில் ஏற்பட்ட புயல், வெள்ளம், பூகம்பம், போன்ற பேரழிவுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
புயல், வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் உள்ளிட்ட பேரழிவுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் அங்கு 944.8 பில்லியன் டாலர் (ரூ.75 லட்சம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா 492.2 பில்லியன் டாலர் (ரூ.36 லட்சம் கோடி) இழப்பும், ஜப்பானுக்கு 379.5 பில்லியன் டாலர் (ரூ.30 லட்சம் கோடி) இழப்பும் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பேரழிவுகளின் போது 13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 440 கோடி மக்கள் காயம் அடைந்துள்ளனர். இக்கால கட்டத்தில் சர்வதேச அளவில் 56 நிலநடுக்கங்களும், சுனாமியும் ஏற்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அறிக்கை சர்வதேச பேரிடர் தடுப்பு தினமான அக்டோபர் 13-ந்தேதி அதாவது நாளை வெளியிடப்படுகிறது. #NaturalDisasters
இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன.
பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன.
மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சுனாமி தாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தில் பலு நகரில் 2 ஓட்டல்கள், ஒரு வர்த்தக நிறுவனம் (மால்) இடிந்து தரை மட்டமானது.

சுனாமி தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 832 என இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. ஆனால் தொடர்ந்து பிணங்கள் மீட்கப்பட்டு வருவதால் சுலாவெசி மாகாணத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது. இன்னும் நிலநடுக்கம் தாக்கிய சில பகுதிகளிலும் மீட்பு பணி நடைபெற வேண்டியுள்ளது. இங்கு 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என துணை அதிபர் ஜுசுப் கல்லா தெரிவித்தார்.
இதற்கிடையே சுனாமி தாக்குதலில் சின்னா பின்னமான பலு நகருக்கு அதிபர் ஜோகோ விடோடோ நேற்று நேரில் சென்றார். அங்கு இடிந்து தரைமட்டமான அடுக்கு மாடியிருப்புக்கு சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர் இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் துயரங்களை நான் அறிவேன். தகவல் தொடர்பு உள்பட அனைத்தும் மிக குறுகிய காலத்தில் சரி செய்யப்படும் என்றார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாங்கள் பசியால் வாடுகிறோம். எங்களுக்கு உணவு தாருங்கள். ராணுவ வீரர்கள் ரேசன் முறையில் குறிப்பிட்ட அளவு உணவே வழங்கினார்கள் என தெரிவித்தார். பலர் மாயமாகிவிட்டதாகவும் கூறினர்.
சுனாமி தாக்குதலில் பலு நகரமே முற்றிலும் அழிந்த நிலையில் உள்ளது. அதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் உணவு பொருட்கள் எடுத்து வர முடியாத நிலை உள்ளதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே பசியை போக்க மார்க்கெட்டுகளில் புகுந்த பொதுமக்கள் கடைகளை உடைத்து உணவு பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். சூப்பர் மார்கெட்டுகளில் நுழையும் ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக் கூடைகளில் தங்களுக்கு தேவையான பிஸ்கெட்டுகள், பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குடிநீர் பாட்டில்களும் கொள்ளைக்கு தப்பவில்லை.
பிணங்கள் குவியல் குவியலாக கிடப்பதால் அவை அழுகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிணங்கள் நேற்று ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
இதற்கிடையே பேரிடர் மீட்பு பணிக்கு ரூ.275 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நிதி மந்திரி ஸ்ரீமுல்யான் இந்திராவதி தெரிவித்தார். #indonesiatsunami







