search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து மகாசபை"

    • அகில பாரதிய இந்து மகாசபை தொண்டர்கள் சுவாமி பிரசாத் மவுர்யாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்து மகாசபை அறிவித்து உள்ளது.

    ஆக்ரா:

    தமிழில் ஸ்ரீ துளசி ராமாயணம் என்று அறியப்படும் ராம சரித மானஸ் என்ற நூல் 16-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும். இதனை அயோத்தியை சேர்ந்த துளசி தாசர் என்பவர் இயற்றி உள்ளார். இந்தி இலக்கியங்களில் மிகப் பெரிய நூல்களில் ஒன்றாக இது எண்ணப்படுகிறது.

    இந்தநிலையில் உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வரும் சுவாமி பிரசாத் மவுர்யா என்பவர் இந்த நூலை பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு விழாவில் பேசிய அவர் சமூகத்தின் பெரும்பான்மையான மக்களை ராமசரித மானஸ் நூலின் சில பகுதிகள் ஜாதியை குறிப்பிட்டு அவமதிப்பதாக குற்றம் சாட்டினார். எனவே இந்த நூலை தடை செய்ய வேண்டும் என கூறினார்.

    சுவாமி பிரசாத் மவுர்யாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதிய ஜனதா தெரிவித்து உள்ளது.

    அகில பாரதிய இந்து மகாசபை தொண்டர்கள் சுவாமி பிரசாத் மவுர்யாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது உருவ பொம்மை எரிக்கபட்டது. பின்னர் அதனை அவர்கள் யமுனை ஆற்றில் வீசினார்கள்

    இந்த நிலையில் மவுர்யாவின் நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என இந்து மகாபை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் சவுரப்சர்மா கூறும் போது, சுவாமி பிரசாத் மவுர்யா ராம சரிதமானஸ் நூலை அவமதித்ததுடன் இந்து மதகோட்பாடுகளை இழிவு படுத்தும் வகையில் பேசி உள்ளார். இதனால் அவரது நாக்கை யார் வெட்டி கொண்டு வந்தாலும் அவருக்கு ரூ.51 ஆயிரம் பரிசுக்கான காசோலை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×