search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்து அமைப்புகள்"

    • நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.
    • பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

    திருப்பூர், கோவை மாவட்டத்தில் பின்னலாடை, பஞ்சாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி, கட்டட கட்டுமானப்பணி, சென்ட்ரிங் மற்றும் டைல்ஸ், கைத்தறி, நுால்தயாரிப்பு, தங்கநகை தயாரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதில் வடமாநிலத்தவர்களுடன், வங்கதேசத்தவர்களும் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அடையாள அட்டையோ, பாஸ்போர்ட், விசா என்று எந்த ஆவணங்களும் இல்லை. இங்குள்ள பெண்களை காதலித்து திருமணம் செய்வதோடு வங்கதேசத்துக்கு அழைத்துச்சென்று மதமாற்றம் செய்கின்றனர். அதோடு துப்பாக்கி கலாசாரம், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கண்காணிப்பை ஏற்படுத்துவதோடு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி, இந்துமக்கள் கட்சி, அனுமன்சேனா, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.  

    • இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது புகார்கள் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்து அமைப்புகளை திரட்டி மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக 63 இந்து அமைப்புகளின் கூட்டு அமைப்பான இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் திட்டமிட்டனர்.

    இதற்காக சென்னை மாநகர் முழுவதும் பரபரப்பான போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மெரினா நோக்கி திரண்டு வாருங்கள் என்கிற கோஷங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

    இந்த நிலையில் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் உள்ள இந்து பரிவார் அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர். அங்கிருந்த மாநில தலைவர் வசந்தகுமாரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், இந்து பரிவார் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த அமைப்பினர் மறியலிலும் ஈடுபட்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
    • போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் முருகன், வள்ளி மற்றும் விநாயகர் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 9-ம் நாள் நடைபெறும் தேர் திருவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுப்பார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் வடம் பிடிக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர் வடம் பிடித்தால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனால் குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. தேர் திருவிழா நாளில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு தேர் திருவிழா நாளான இன்று (சனிக்கிழமை) குமார கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், தக்கலை துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது. என்ன நடக்குமோ? என பக்தர்கள் அச்சப்பட்டனர்.

    இந்தநிலையில் இன்று காலையில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் முருகன்-வள்ளி ஒரு தேருக்கும் விநாயகர் ஒரு தேருக்கும் எழுந்தருளினர். காலை 8-30 மணிக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    அப்போது திடீரென போலீசார் பாதுகாப்பையும் மீறி இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பா.ஜனதா மாவட்டத் தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்பட இந்து அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கோஷமிட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைதான அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். தேரோட்ட நாளில் நடைபெற்ற போராட்டத்தால் இன்று குமாரகோவில் பகுதியில் பதட்டமான சூழல் காணப்பட்டது.

    ×