என் மலர்
செய்திகள்

கேரள அரசு அலுவலகம் மீது தாக்குதல்- முத்தரசன் கண்டனம்
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான அலுவலகத்தை இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #keralagovernmentoffice
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான சுற்றுலா அலுவலகத்தின் மீது நேற்று நள்ளிரவில் இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்கி உள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தகவல்கள் உள்ளன.
இத்தாக்குதல் சம்பவத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #mutharasan #keralagovernmentoffice
Next Story






