search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ராணுவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை"

    • டேராடுனில் உள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ளது.
    • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் வரும் 15-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டேராடுனில் உள்ள இந்திய இராணுவக் கல்லூரியில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்கான தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெறவுள்ளது.

    இத்தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொதுஅறிவு ஆகிய தாள்கள் கொண்டது. கணக்குத்தாள் மற்றும் பொது அறிவுத் தாள் ஆகியன ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக் கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். (நேர்முகத் தேர்வு) பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலும் தேர்வு பெற நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

    விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையிலுள்ள இத்தேர்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட ஒளிநகல் எடுக்கப்பட்ட இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்பப் படிவங்கள் நிராகரிக்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயச் சாலை, பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்குவருகிற 15-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த வாய்ப்பினை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

    ×