search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணை செயலாளர்"

    • எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
    • அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மாநில, மாவட்ட புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து வருகிறார். வர்த்தக அணி மாநில இணை செயலாளராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார். மாநில வர்த்தக அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் நாகர்கோவில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளரும், கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவரும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.

    • மக்களுக்கு பயன்படும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட வேண்டும் என இணை செயலாளர் கூறினார்.
    • கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச்செயலர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கஜ்குமார் பன்சால் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், இ-சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன.

    மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமை யான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யலாம்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டி டங்கள் கட்டி மக்க ளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவை யான வேளாண் கருவிகளை வாடகைக்கு விடலாம்.

    அதே போல் விவசாயி களுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளூரில் இருந்து நிறைவேற்றும்போது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான வழிகாட்டு தலை செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், பொது மேலாளர் கருணாகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×