search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு சங்கங்கள்"

    • கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்கவும் ஆணையிட வேண்டும்.
    • தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத்துறை தனியாக ஆள்தேர்வு நடத்துவது நியாயமற்றது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 2257 உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுத்துறை, பொதுத்துறை பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்த பிறகும் கூட்டுறவுத்துறை தனியாக ஆள்தேர்வு நடத்துவது நியாயமற்றது.

    கூட்டுறவுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆள்தேர்வு அறிவிக்கையை திரும்பப் பெற்று அந்தப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்தேர்வு மையங்களை கலைக்கவும் ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
    • முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகரகூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbtiruppur.net என்ற இணைய தளம் வாயிலாக 1.12.2023 அன்று மாலை 5.45 மணிவரை வரவேற்றப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 -ஆம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ( Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியற்கான ரசீதை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணை தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவுகணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுகான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்ப தாரர்கள் எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்றி முறை, அவர்கள்தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbtiruppur.net வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகைக்கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திற னாளி கடன், மகளிர் குழுவிற்கான கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

    இந்த சங்கங்களில் அட மானம் வைத்துள்ளவர்க ளின் கடன்கள் அடிக்கடி அரசால் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் அதற்குரிய தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் பல சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வருகின்றனர். இதனால் டெபாசிட் தாரர்களுக்கு முதிர்வு தொகையை கூட வழங்க முடியாத நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் ரேசன் கடை ஊழியர்களுக்கான ஊதியம், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவை கூட்டுறவு சங்கங்கள் மூலமே வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த தொகையை அரசு ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனி டையே டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம், டிரோன், லாரிகள், சரக்கு வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்.

    கிட்டங்கிகள் கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்களை அதிகாரிகள் நிர்பந்தம் செய்து வருகின்ற னர். இதற்கு தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த 3ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் 198 கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டு ள்ளன. இதனால் பயிர் கடன், நகை கடன் மற்றும் உரம் வினியோகம் ஆகி யவை கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. விவசாய பணிகள் தொடங்கி உள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்கள் மூடி கிடப்பதால் விவசாயிகள் தனியார் உரக்கடைகளை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஐ.சி.டி.பி., ஆர்.ஐ.டி.எப். அக்ரோ சர்வீஸ் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் டிராக்டர் மற்றும் விவசாய உபகரண ங்கள் வாங்கப்பட்டன. கிடங்குகளும் கட்டப்பட்டன. தற்போது அவை பயன்பாட்டில் இல்லாததால் கூட்டுறவு சங்கங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    அதேபோல தற்போதும் எந்திரங்கள் வாங்கவும், கிடங்குகள் கட்டவும் வற்புறுத்தி வருகின்றனர். இதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை செலவு செய்ய நேரிடும். இதனால் சங்கங்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் என்பதால் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்
    • பொது மக்களுக்கு பால் விற்பனை செய்கின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டுகிறது.

    நாகர்கோவில், :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    குமரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை விஜிலென்ஸ் அதிகாரிகளை கொண்டும், துறை அதிகாரி களை கொண்டும் உள்ளூர் பொதுமக்களுக்கு பாலினை விற்பனை செய்யக்கூடாது எனவும் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் மூலம் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்கின்ற பாலும் கிடைக்காமல் போகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்கின்ற பாலின் விலையை விட ஆவினுக்கு கொடுக்கப்ப டுகின்ற பாலின் விலை குறைவாக கிடைப்பதால் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை உள்ளது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் நலிவடைந்த பொது மக்களுக்கு பால் விற்பனை செய்து வருகின்ற காரணத்தினால் தான் இச்சங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    ஆனால் உள்ளூர் பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனக் கூறுவதால், நஷ்டத்திற்கு பாலினை ஆவினுக்கு விற்பனை செய்ய நிர்ப்பந்திப்பதாலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

    ஏற்கனவே குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த சுமார் 121 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து கலைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ரீத்தாபுரம், சுருளோடு, பேச்சிப்பாறை ஆகிய ஊர்களில் 3 புதிய பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்கங்கள் ஆரம்பிக்கப் பட்ட நிலையில் இச்சங்கங்க ளுக்கு தேவையான அடிப் படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால், பல மாதங்கள் ஆகியும் இச்சங்கங்களின் மூலம் பால் உற்பத்தி செய்யப்படவில்லை.

    கடந்த ஆட்சியில் தமிழ் நாட்டில் பால் உற்பத்தி இந்தியா விலேயே 2-வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது தமிழ்நாடு 4-வது இடத்திற்கு தள்ளப்படுகிறது. கர்நாடகா 2-வது இடத்தையும், உத்திரபிரதேசம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

    எனவே குமரி மாவட்ட ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியை அதிகரிக்கும் விதத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், இச்சங்கங்க ளில் உள்ள உறுப்பினர்கள் வைத்துள்ள கறவை மாடுகளுக்கு தேவையான கலப்பு தீவனங்கள் முறையாக கிடைப்பதற்கும், மருத்துவ வசதிகள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு விஜிலென்ஸ் அதிகாரிகள் மூலம் நலிந்த நிலையில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை மிரட்டுகின்ற போக்கினை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும். சங்கங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மக்களுக்கு பயன்படும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட வேண்டும் என இணை செயலாளர் கூறினார்.
    • கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழகத்தின் இணைச்செயலர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 131 கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கஜ்குமார் பன்சால் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் 10-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி பொதுவாக கூட்டுறவு வங்கிகளின் மூலம் நியாய விலை கடை நடத்துதல், பெட்ரோல் பங்கு நடத்துதல், உரம் விற்பனை செய்தல், இ-சேவை மையம் செயல்படுத்துதல், கூட்டுறவு வங்கியின் மூலம் தனிநபர் கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் வழங்குதல், விவசாயிகளுக்கான கடன் திட்டம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகள் அந்தந்த கூட்டுறவு சங்க வங்கிகளின் வளர்ச்சிக்கு பயனளித்து வருகின்றன.

    மேலும் ஒவ்வொரு கூட்டுறவு வங்கியும் முழுமை யான வளர்ச்சி பெறுகின்ற வகையில் திட்டமிடுதல் வேண்டும். பொதுவாக நியாய விலைக்கடைகளில் 5 நாட்களுக்கு பணிகள் அதிகமாக இருக்கும். மற்ற நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் விற்பனை செய்யலாம்.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெரிய அளவில் வணிக நிறுவன கட்டி டங்கள் கட்டி மக்க ளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். அதேபோல் விவசாயிகளுக்கு தேவை யான வேளாண் கருவிகளை வாடகைக்கு விடலாம்.

    அதே போல் விவசாயி களுக்கு தானிய பொருட்கள் வைப்பதற்கான கிடங்குகள் கட்டி மாதந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம். ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் பாதுகாப்பு பெட்டக வசதி கூடுதலாக அமைத்து வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர வாடகைக்கு அனுமதிக்கலாம்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 25 வகையான பணிகளை செயல்படுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு இந்த வருவாயை பயன்படுத்தும் பொழுது பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர்களின் தேவையை உள்ளூரில் இருந்து நிறைவேற்றும்போது வாடிக்கையாளர்கள் மன நிறைவு பெற்று ஒவ்வொரு சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். அதேபோல் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு அரசு தேவையான வழிகாட்டு தலை செயல்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் மனோகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார், பொது மேலாளர் கருணாகரன், சரக துணைப்பதிவாளர் சுப்பையா மற்றும் உதவி பொது மேலாளர்கள், சரக மேலாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
    • மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    மதுரை

    தேசிய கூட்டுறவு பயிற்சி நிறுவன நிதி இயக்குநர் டாக்டர் கோபால்சாமி, ஆர்.கே.22 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.வி.கே.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் சமூக பொரு ளாதார வளர்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விவசாயிகளுக்கு பயிர் கடன்கள் மற்றும் இடு பொருட்கள் வழங்குவதன் மூலம் விவசாய வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்த சங்கங்கள் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் 3 அடுக்கு நிர்வாக அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இதன்படி மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட அளவில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 13 கோடி விவசாயிகள் உறுப்பி னர்களாக உள்ளனர். மற்ற 2 அடுக்குகள் அதாவது மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே நபார்டு வங்கி மூலம் தானியங்கப்படுத்தப்பட்டு, பொது வங்கி மென்பொருள் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இருப்பினும், பெரும்பா லான சங்கங்கள் இதுவரை முழுமையான முறையில் கணினிமயமாக்கப்பட வில்லை. இதனால் தற்கால சூழ்நிலைக்கேற்றவாறு வேகமான, துல்லியமான, திறமையான, நம்பிக்கை யான மற்றும் வெளிப்படையான உறுப்பினர் சேவைகள் புரிவதில் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. சில மாநிலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தனித்த மற்றும் பகுதியளவு கணினிமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் அகில இந்திய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடனும் அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவரும் நோக்கத்து டனும் இக்கடன் சங்கங்களை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தினை சமீபத்தில் அறிவித்துள்ளது.

    இக்கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நிதிச் சேர்க்கை, விவசாயிகளுக்கு சிறு மற்றும் குறு விவசாயி களுக்கு சேவையை வலுப்படுத்துதல் மற்றும் உரங்கள், விதைகள், போன்ற இடு பொருட்கள் வழங்குவது ஆகியன உட்பட்ட முக்கிய சேவை மையங்களாக மாற இந்தத் திட்டம் உதவும்.

    மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கிகள் இத்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு அரசாங்க திட்டங்களை (கடன்) மற்றும் மானியம் சம்பந்தப்பட்ட இனங்கள்) முன்னெடுப்பதற்கான முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இது கடன்களை விரைவாகச் செலுத்துதல், குறைந்த மாற்றச் செலவு, விரைவான தணிக்கை மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்துதல் மற்றும் கணக்கீடு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளைக் உறுதி செய்யும்.

    இணைய பாதுகாப்பு மற்றும் தரவு சேமிப்பகம் அடைப்படையிலான ஒரே மாதிரியான மென்பொருளை உருவாக்கு தல், சங்கங்களுக்கு கணினி மென்பொருள் ஆதரவை வழங்குதல், பராமரிப்பு ஆதரவு மற்றும் பயிற்சி உட்பட ஏற்கனவே உள்ள பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். மாநிலங்களின், தேவைக்கேற்ப கணினிம யமாக்குவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்ட இந்த மென்பொருள் வட்டார மொழியில் இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது.

    திருப்பூர் :

    தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உர வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவ்வகையில், 2021-22 நிதியாண்டில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் உரம் விற்பனை செய்த மூன்று கூட்டுறவு சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதில், 527 டன் அளவு உரம் விற்பனை செய்த, பள்ளபாளையம் கூட்டுறவு சங்கம் முதல் பரிசு பெற்றது. 354 டன் விற்பனை செய்த ருத்திரபாளையம் கூட்டுறவு சங்கம் இரண்டாம் பரிசும், 343 டன் விற்பனை செய்த தளி கூட்டுறவு சங்கம் மூன்றாவது பரிசையும் பெற்றது.கலெக்டர் அலுவலகத்தில் இந்த மூன்று சங்கங்களுக்கும் பரிசு வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மண்டல இணை பதிவாளர் சீனிவாசன், கரூர் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா ஆகியோர் இதனை வழங்கினர். சரக துணை பதிபதிவாளர் சண்முகவேல், உடுமலை நகர கூட்டுறவு வங்கி துணை பதிவாளர் கதிரவன் முன்னிலை வகித்தனர்.

    • மதுைர மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரம் கையிருப்பில் உள்ளது.
    • மேற்கண்ட தகவலை இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 13 ஆயிரத்து 777 நபர்களுக்கு ரூ. 110.85 ேகாடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு கடன் 6 ஆயிரத்து 163 நபர்களுக்கு ரூ. 26.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 513 டன் கிரிப்கோ யூரியா மற்றும் விஜய் யூரியா 125 டன் அனுப்பப்பட்டுள்ளது.

    தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா ஆயிரத்து 49 டன், டி.ஏ.பி. 372 டன், பொட்டாஷ் 254 டன், காம்ப்ளக்ஸ் 941 டன் என மொத்தம் 2 ஆயிரத்து 616 டன் இருப்பு உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பயிர்க்கடன் மற்றும் உரங்களை பெற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை வேளாண் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    ×