search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant posts"

    • திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.
    • முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகரகூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந் தேதி அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

    இந்த தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் www.drbtiruppur.net என்ற இணைய தளம் வாயிலாக 1.12.2023 அன்று மாலை 5.45 மணிவரை வரவேற்றப்படுகின்றன. இதற்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 24-ந் தேதி காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை திருப்பூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.புனேயில் உள்ள வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம் வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை ( கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 -ஆம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு ( Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியற்கான ரசீதை திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணை தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை. எழுத்து தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவுகணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ்போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்து தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும் தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும். எழுத்து தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுகான மதிப்பெண் முறையே 85:15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்ப தாரர்கள் எழுத்து தேர்விலும், நேர்முக தேர்விலும் பெற்ற ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இன சுழற்றி முறை, அவர்கள்தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணைய தளத்தில் www.drbtiruppur.net வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உடனடியாக நிரப்ப அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

    புதுச்சேரி:

    அரசின் அனைத்து துறைகளிலும் உதவியாளர்க ளின் காலி பணியிட எண்ணிக்கை 600க்கும் மேற்பட்டதாகும்.

    தற்போது டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையின் நடவடிக்கையால் ஏற்பட்ட குளறுபடி யால் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

    இதனால் அரசுத்துறை இயங்குவதில் பெரும் சிக்கலாக அமைந்துள்ளது. கடந்த 2022 டிசம்பர் மாதம் எந்த அடிப்படையில் உதவியாளர்கள் பதவி உயர்வு கொடுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் 7 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வரும்

    யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்களை கொண்டு 600 உதவியாளர் பதவிகளை மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.

    ஆனால் தற்போது டி.பி., ஏ.ஆர். வெளியிட்ட உதவி ஐ.டி.சி.இ. தேர்வால் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 750 யூ.டி.சி. எனப்படும் முதுநிலை எழுத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பதவி உயர்வு சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தொடுத்துள்ள வழக்கு முடிய எத்தனை மாதங்கள்- ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. டி.பி., ஏ.ஆர். எனப்படும் பொது நிர்வாக சீர்திருத்த துறையால் எடுக்கும் இந்த தவறான கொள்கை முடிவுகளால் யூ.டி.சி., ,எல்.டி.சி. உதவி பதவிகள் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.

    அத்தியாவசிய துறையாக கருதப்படும் வருவாய்த்துறை- கலால் துறை-பதிவுத்துறை- போக்குவரத்து துறை- போன்ற இடங்களில் மிகுந்த காலி பணியிடங்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்ய முடியாமல் அரசு தவிப்பதை மக்கள் விரும்பவில்லை..

    முதுநிலை எழுத்தர்களை கொண்டு உதவியாளர்கள் பணி பதவி உயர்வு மூலம் நிரப்பினால் ஏறத்தாழ 800 யூ.டி.சி. பணியிடங்கள் காலியாக இருக்கும். அதை நேரடி நியமனம் மூலம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் இந்த சமுதாயத்தில் இருக்கும் இளைஞர்களும் அரசு துறையில் சேருவார்கள் .

    எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி இதனை அரசு ஊழியர்கள் பிரச்சனை என்று பாராமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சனை-சமூகப் பிரச்சனை என்று கருதி பதவிஉயர்வின் மூலம் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தி.மு.க. சார்பில் வேண்டுகோள் வைக்கின்றேன்.

    ×