search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடப்பிரச்சனை"

    • அரசு (வயது33). இவருக்கும், அருள்(50) இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் அரசு (வயது33). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருள்(50) என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருள், அவரது மகன் ஸ்டாலின் மற்றும் ராமசாமி மகன் விவேக்(26) ஆகியோர் அரசுவை ஆபாசமாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து அருள், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள விவேக்கை தேடி வருகிறார்.

    ×