search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இச்சிப்படடி ஊராட்சி"

    • உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.
    • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    இச்சிப்பட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது.

    உழைப்பாளா் தினத்தையொட்டி மே 1-ந்தேதி பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்காததால் இச்சிப்பட்டி ஊராட்சிகிராம சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இச்சிப்பட்டி கிராம சபைக்கூட்டம் பெத்தாம்பூச்சிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் இச்சிப்பட்டி பகுதி பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஊராட்சியை மேம்படுத்துவதற்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஊராட்சித் தலைவா் வேல்மணி தெரிவித்துள்ளாா். 

    ×