search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இ.பெரியசாமி பேச்சு"

    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனைவருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பேசினார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ரேசன் பொரு ட்களை வாங்கி வந்தனர். தங்கள் பகுதியில் ரேசன் கடையை திறக்க வேண்டும் என அமைச்சர் இ.பெரிய சாமியிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் வரவேற்றார்.

    விழாவில் ரேசன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ கத்தில்தான் கூட்டுறவு த்துறை சிறப்பாக செயல்படு கிறது. கடந்த 12-வருடங்க ளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியின் போது வருவா ய்துறை அமைச்சராக இருந்தநான் கிராமங்கள் தோறும் ரேசன் கடையை திறக்க உத்தரவிட்டதால் 300 குடும்ப அட்டை உள்ள கிராமங்களில் கூட பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு ள்ளன. தற்போது இப்பகுதியில் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இவர்களுக்கு சிரமமின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி பொது மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்ககூடிய வகையில், தனியார் மற்றும் அரசு ஆஸ்பஸ்த்திரி அமைய உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனை வருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலா ளர்கள் ராமன், முருகேசன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பொது விநியோ கதிட்ட துணைப்பதிவாளர் அன்புக்கரசன், பித்தளை ப்பட்டி கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் பொன்னு ச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பித்தளைப்பட்டி கூட்டுறவு வங்கி மேலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

    ×